ஆறு மாதம் இருண்டு இருக்கும் இடம்.
குளிர்பிரதேசம்
எப்போதும் சுற்றுலா பயணிகளை கவரும்.
ஆனால் அந்த குளிர் பிரதேசம் கிடுகிடுக்க வைக்கும் குளிர் நிலவுதாய், ஆண்டில் ஆறு மாத காலம் இருண்டு இருப்பதால் அப்படிப்பட்ட இடம் நார்வே நாட்டிலுள்ள ஸ்வால் பார்ட் காண்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும் பகுதியாகும்.
பனி பிரதேசமான இங்கு காணும் இடமெல்லாம் வெள்ளை வெள்ளீர் என பனி போர்வை தான் போர்த்தியிருக்கும் .
ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் பனியால் மூடப்பட்டு இருக்கும் .
ஸ்வால் பார்ட்டில் சுமார் 2500 பேர் தான் வசித்து வருகின்றனர்.
ஐந்து வருடத்தில் ஆறு மாதங்கள் முழுக்க முழுக்க இரவின் இருட்டு தான் சூழ்ந்திருக்கும்.
சூரியனை பார்க்கவே முடியாது.
அதே வேளையில் கோடை காலங்களில் அதாவது சூரியன் எட்டிப் பார்க்கும் மாதங்கள் மட்டும் ஸ்வால் பார்ட்டில் இரவு கிடையாது.
24 மணி நேரமும் பகல் தான்.
அந்த நாட்களில் ஸ்வால் பார்ட்டில் கொட்டி கிடக்கும் இயற்கை அழகு சுற்றுலா பயணிகளை மயக்கும்.
எங்கும் நிறைந்திருக்கும் பனி போர்வை பரவசத்தில் ஆழ்த்தும் இன்னொரு விசேஷம் எந்த நாட்டவரும் இங்கு செல்ல விசா தேவை இல்லை .
விசா இன்றியே ஸ்வால் பார்ட்டில் நிரந்தரமாக குடியேரவும், தங்கியிருந்து வேலை செய்யவும் முடியும் .
ஆனால் பெரும்பாலமான நேரங்களில் இங்கு வெப்பநிலை மைனஸ் 20 டிகிரிக்கு கீழே சென்று விடும்.
சாதாரண வெப்பநிலை சூழலில் இருந்து வருபவர்களால் இதை தாங்க முடியாது.
ஆகவே மிகுந்த உடல் மனவழு கொண்டவர்களும், சவாலை விரும்புவர்களும் மட்டும் ஸ்வால் பார்ட் செல்லலாம்.
அதன் அசாத்திய அழகை ரசிக்கலாம்.