கோடையில் நுங்கை மிஸ் பண்ணாதீங்க
தமிழ்நாட்டின் மாநில மரம் பனை . கற்பக தரு என்றும் இதை அழைப்பார்.
வெயில் காலத்தில் நம்மை பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப் பிரசாதம் தான் பனைமரம்.
இந்த மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு மட்டை ஓலை என நமக்கு பயனளிக்கும் பல பொருட்கள் கிடைக்கின்றன.
குறிப்பாக நுங்கை ஐஸ் ஆப்பிள் என்றும் .
அதே போன்ற ஆரோக்கியத்தை நுங்கும் கொடுக்கும்.
கோடைகாலத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளிலிருந்தம் நமது உடலை பாதுகாக்கும்.
சத்துக்கள் நுங்கில் அதிகம் உள்ளன .
நுங்கில் அதிகளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், தயமின், ஆஸ்கார் பிக் அமிலம், புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன .
நுங்கு கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் தன்மை அதிகம் உள்ளது.
எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டுடன் நுங்கை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
நுங்கில் உள்ள நீரானது பசியை தூண்டுகிறது.
மேலும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு அருமருந்தாக உதவுகிறது .
நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து பருக்கலாம்.
பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
குழந்தை பெற்ற பெண்கள் நுங்குடன் சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
குழந்தைக்கும் நல்ல ஊட்டுச்சத்து கிடைக்கும்.
நுங்கை மசித்து வியர்குரு, கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால் விரைவில் சரியாகும்.
தோலும் பளபளப்பாகும்.
நுங்கை அரைத்து தேங்காய் பால் சேர்த்து குடித்து வந்தால் அல்சர், வயிற்றுப்புண் பிரச்சனை தீரும்.
இப்படி ஏராளமான நன்மைகள் நுங்கில் இருக்கின்றன.
எனவே இந்த கோடை காலத்தில் மிஸ் பண்ணாமல் உங்கள் ஒரு கை பார்த்திடுங்கள்.