சேலை கட்டு பற்றி ஆய்வு சொல்வது என்ன?
எத்தனையோ ட்ரெண்டிங்கான பல உடைகள் வலம் வந்தாலும் பாரம்பரிய உடையான சேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டும் இன்றளவும் குறைவே இல்லை.
பண்டிகை வீட்டு விசேஷங்கள் என்றாலே சேலைகளை விரும்பி அணிவது உண்டு .
அவ்வாறு பிடித்து ரசித்து அணியும் சேலையால் புற்றுநோய் ஏற்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
பெண்கள் அணியும் சேலைகளால் அவர்களுக்கு சரும புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மகாராஷ்டிராவில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரி மற்றும் பீகாரில் உள்ள மதுபானி மருத்துவக் கல்லூரிகளில் பெண்கள் சேலை அணிவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது .
ஆய்வுக்காக இந்த இரண்டு மாநிலங்களில் வாழும் நீண்ட காலமாக புடவை அணியும் இரு பெண்களையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் உடலை ஒட்டி இறுக்கமாக அணியும் பெண்களுக்கு சேலை மெலனோசிஸ் அல்லது சேலை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் இருந்ததையும் அதே சமயத்தில் சேலைக்கு பிடி கொடுக்கும் உள்ளாடையை இறுக்கி அணியும் பெண்களுக்கு பெட்டிக்கோட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
சேலைகளையோ அல்லது உள்ளாடைகளையோ இறுக்கி கட்டுவதால் சருமத்தில் ஏற்படும் உராய்வு அதிகப்படியான அழுத்தம் மற்றும் அதிகப்படியான வியர்வை போன்றவை நாட்பட்ட சரும அலர்ஜி மற்றும் சருமத்தில் புண் ஏற்பட வழி வகுக்கலாம்.
சில நேரங்களில் இவை சரும புற்றுநோய் ஏற்படவும் காரணமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
புற்றுநோயை எவ்வாறு கண்டறிவது?
இடுப்பு பகுதி அல்லது வயிற்று பகுதியில் சருமத்தில் கருப்பாக இருத்தல் .
அதாவது ஹைப் பார்பிக் மென்டேஷன் ஏற்படுதல் .
இடுப்பு பகுதியில் சர்மம் தடித்து கட்டிகள் வருவது மற்றும் சிவப்பு அரிப்பு திட்டுகள் காணப்படுதல் எவ்வாறு தடுக்கலாம்.
மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் மற்றும் சேலை பட்டைகள் அணிவதை தவிர்க்கலாம்.
மென்மையான மற்றும் வியர்வையை உறிஞ்சக்கூடிய உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணியலாம்.
முடிந்த வரையில் உடலுடன் பொருந்தக்கூடிய மென்மையான லேசான சேலைகளை அணியலாம் அல்லது சேலையை சிறிது தளர்வாக இருக்குமாறு அணிந்து கொள்ளலாம்.
சேலை அணியும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டால் அது குணமடையும் வரை தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆடைகளையும், உடலையும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இடுப்பு பகுதியில் சரும பிரச்சனைகளை உணர்ந்தால் சேலை அணியும் பெண்கள் பரிசோதித்து சிகிச்சை பெறுவது அவசியமானது.