அதிக தாகத்தை போக்குவதற்கு

அதிக தாகத்தை போக்குவதற்கு

 சிலருக்கு எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமலேயே இருக்கும். இதற்கு காரணம் உடலில் நீர்ச்சத்து குறைந்து போவதே ஆகும்.

 எனவே உடலில் நீர் சத்தை சீரான அளவில் பராமரிக்க தினசரி குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 மேலும் ஒரு சில உணவுப் பொருள்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 இதனால் உடலில் நீர்ச்சத்து பராமரிப்பதோடு தாகம் அதிகம் எடுக்காமலும் தடுக்கலாம் .அவை என்னவென்று பார்க்கலாம் :

இளநீர்

 தண்ணீருக்கு அடுத்தபடியாக தாகத்தை தணிக்க உதவும் பானங்களில் ஒன்றுதான் இளநீராகும்.

 இளநீர் உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு உடலுக்கு ஆற்றலையும் தந்து உடல் வெப்பம் அடைவதை தடுக்கிறது.

 திராட்சை

கருப்பு திராட்சை அதிகம் சாப்பிட்டால் நாக்கு வறட்சி தணிந்து தாகம் அதிகம் எடுப்பதை தடுக்கிறது.

 திராட்சை மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பம் அடைவதை தடுத்து வறட்டு இருமல் வருவதையும் தடுக்கிறது.

 வெள்ளரிக்காய்

நீர்ச்சத்து 90% உள்ளதால் வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் வெப்பநிலை குறைந்து உடல் குளிர்ச்சி, உடலும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

 இதனால் தாக உணர்வு குறையும்.

 வாழைப்பழம் 

விலை மலிவாக கிடைக்கும் பழங்களில் ஒன்று வாழைப்பழம்.

 வாழைப்பழத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் உடல் வறட்சி அடைவதையும் தாகம் எடுப்பதையும் தடுக்கும்.

 கிவி 

கிவி புளிப்பு சுவை கொண்டிருந்தாலும் தாகத்தை தடுக்கும் தன்மை அதற்கு உண்டு.

 இதனால் குடல் வறட்சி அடையாமல் தடுக்கிறது.

 ஆப்பிள் .

எல்லா சீசன்களிலும் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று ஆப்பிள் .

 ஆப்பிளை அதிகம் சாப்பிடுவதால் அடிக்கடி தாகம் எடுப்பதை தடுக்கிறது.

 பிளம்ஸ் 

பிளம்ஸ் பழத்தில் நீர் சத்து அதிகம் இருப்பதால் இது தாகத்தை போக்க உதவுகிறது.

 தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது உடல் வறட்சி நா வறட்சியை போக்கி குளிரச் செய்கிறது.

 இதனால் உடல் வெப்பம் குறைந்து தாகத்தை தவிர்க்கிறது.

 பசலைக்கீரை

உணவில் அடிக்கடி பசலைக் கீரையை சேர்த்துக் கொண்டால் தாகம் எடுக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
 இந்த கீரையை மூலம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை