தலைக்கு குளிக்க தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

தலைக்கு குளிக்க தவிர்க்க வேண்டிய விஷயங்கள் 

தலைக்கு குளிப்பது உடல் நலத்தை பராமரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய முறைகளும் ஒன்று .

அதனால்தான் தலைக்கு குளிப்பது அவசியத்தை வலியுறுத்திய முன்னோர்கள் அதற்கு பல விதிமுறைகளை வைத்திருந்தனர்.

 அதே நேரம் தலைக்கு குளிக்கும் போது சில தவறுகளை தவிர்ப்பது நல்லது அவை பற்றி பார்ப்போம்.

 தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கும் போது தலை முடியை மென்மையாக தேய்க்க வேண்டும்.

 சீக்கிரம் குளிக்க வேண்டும் என்ற அவசரத்தில் தலைமுடி மற்றும் ரோம கால்களில் கடினமாக தேய்க்கும் போது முடியின் வெவ்வேறு திசையில் நகர்வு ஏற்பட்டு இது முடியை சேதப்படுத்தி முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது.

 அதே போல் தலையை துவட்டுவதற்கு மென்மையான துண்டை பயன்படுத்தி லேசாக ஒட்டி எடுக்க வேண்டும்.

 பலருக்கு தலைக்கு குளிக்கும் போது அதிக முறை ஷாம்பு பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.

 அவர்கள் தலையில் அதிக அளவில் அழுக்கு சேர்ந்திருப்பதாக நினைத்துக் கொண்டே ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஷாம்பு உபயோகித்து தலை முடியை அலசுவர்.

 இது தலையின் மேற்பரப்பில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும்.

 இதனால் முடி பாதிவதோடு வறட்சியும் ஏற்படுத்தும்.

 இந்தியாவில் சுமார் 60 சதவீத மக்கள் சாம்பு பயன்படுத்திய பின் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.

 தலைக்கு குளிக்கும்போது ஷாம்பு பயன்படுத்துவது அவசியம் என நினைக்கும் பலரும் ஷாம்புக்கு பின் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருப்பதில்லை.

 இந்த அறியாமை இன்னும் நீடிக்க தான் செய்கிறது.

 ஷாம்பூக்கு பின் கண்டிஷனர் பயன்படுத்துவது கூந்தலில் ஏற்படும் வறட்சியை குறைப்பதால் முடி உதிர்வும் குறைகிறது .

சூடான நீரில் குளிப்பதை ஒரு சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள் .

அதே பழக்கத்தில் தலைக்கும் சுடு தண்ணீரை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டு இருப்பார்கள்.

 இது மயிர் கால்களில் உள்ள ph அளவை பாதிக்கலாம் .

இதனால் தலையில் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

 முடிந்தவரை நாம் குளிக்கும் போது தண்ணீர் அறை வெப்ப நிலையில் இருப்பது நல்லது அல்லது மிதமான வெப்பநிலையில் இருக்கலாம்.

 தலைக்கு ஹேர் டிரையர் பயன்படுத்துபவர்கள் முடிந்தவரை வெப்பநிலையை அதிகப்படியாக இல்லாமல் அளவாக வைத்துக் கொள்வது முடி உதிர்வை தடுக்கும்.

 பெண்கள் பெரும்பாலும் வீட்டில் வேலையை முடித்து பெண் குளித்து அலுவலகத்துக்கு கிளம்புவார்கள்.

 அவ்வாறு கிளம்பும் அவசரத்தில் இருமாக இருக்கும் தலையில் நேரடியாக சீப்பை பயன்படுத்துவார்கள் .

தலைமுடி ஈரமாக இருக்கும்போது மென்மையாகவும், எளிதில் உடையும் தன்மையுடனும் இருக்கும்.

 அப்போது சிப்பை பயன்படுத்துவது அதிகப்படியான முடி உதிர்வை ஏற்படுத்தும்.

 அவசரத்தில் கட்டாயம் சீப்பை உபயோகித்து தான் ஆக வேண்டும் என்றாலும் முடிந்தவரை பெரிய பல்கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும்.
 அதை முடியின் நுனிப்பகுதியில் தொடங்கி மேற்பகுதி வரை மிக மென்மையாக பயன்படுத்த முயற்சி செய்வது நல்லது.

கருத்துரையிடுக

புதியது பழையவை