மண்பானை குடிநீரின் நன்மைகள்
இன்றைய கால சூழலில் சுத்தமான குடிநீர் கிடைப்பது அரிதாகி போனதால் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.
ஆனால் அந்த நீரும் எந்த அளவு சுத்தமானது என்பது நமக்கு தெரியாது.
மண் பானையில் குடிநீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருளையும் மண்பானை உறிஞ்சிக்கொண்டு நீரை சுத்தப்படுத்தி விடுகிறது .
எனவே உலகத்தில் மிகச்சிறந்த வாட்டர் ஃபில்டர் மண்பானைதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் .
களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் உடல் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும்.
மேலும் இதில் உள்ள தாதுக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
இயற்கையாகவே பானைகளில் உள்ள நீர் குளிர்ச்சி அடைகிறது.
இதனால் தண்ணீரின் சுவையும் அதிகரிக்கிறது எனவேதான் கோடைகாலத்தில் பானை நீரை அருந்தினால் அதன் குளிர்ச்சி தன்மை இதமான உணர்வை தருகிறது.
புதிதாக மண்பானை வாங்கும் போது முதன் முதலில் ஊற்றும் நீரை குடிக்கக்கூடாது ஒரு வாரம் தண்ணீர் மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர் தினசரி குடிக்க ஆரம்பிக்கலாம்.
கோடைகாலத்தில் வெயில் காரணமாக சில நோய்கள் தொற்றிக் கொள்ளும் .
இதை தடுக்க மண்பானை நீர் சிறந்த இயற்கை மருந்து.
கனிமச்சத்துக்கள் நிறைந்த பானை நீர் உடலுக்கு பல நோய் எதிர்ப்பு சக்திகளை அழிப்பது மட்டுமின்றி தீராத தாகத்தையும் ஒரு கிளாஸ் நீரில் தீர்த்துவிடும் .
மண்பானையில் நீர் அருந்துவதால் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும் .
அதில் இருக்கும் மினரல்கள் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
குளிர்சாதனை பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை அருந்தும்போது சில பின் விளைவுகள் ஏற்படும்.
மண்பானை நீர் எந்த பக்க விளைவுக்களுமற்றது.
குறிப்பாக சளி, இரும்பல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளுக்கு பானை நீர் சிறந்த தீர்வு தரும்.
வீட்டில் மணல் பரப்பி அதன் மேல் பானை வைத்து குடிநீரை ஊற்றி வைத்து குடியுங்கள்.
அடிக்கடி மணல் ஈரப்பதத்துடன் இருக்கிறதா? என பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில் அப்போதுதான் நீர் குளிர்ச்சியாக இருக்கும் கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.