மழைக்காலத்தில் பயணிக்கும் பெண்களுக்கான குறிப்புகள்
பல்வேறு வேலைகள் காரணமாக தற்போது பெண்களும் அதிக அளவில் பயணம் மேற்கொள்கிறார்கள் .
இந்தப் பயணங்களின் போது அவர்களின் பாதுகாப்புக்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும் .
குறிப்பாக பருவகால சூழ்நிலையை மனதில் கொண்டு அதற்கு ஏற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பருவ காலங்களில் பயணம் செய்யும் பெண்கள் எத்தகைய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பார்ப்போம்:
மழைக்கால பயணங்களின் போது குடை, ரெயின் கோட், ஜெர்க்கின் ஆகியவற்றோடு கூடுதலாக ஒரு செட் உடையையும் உடன் எடுத்துச் செல்வது நல்லது .
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நீங்கள் அணிந்திருக்கும் உடை ஈரமாகிவிட்டால் உடனே அதை மாற்று உடையை அணிந்து கொள்ளலாம்.
மழைக்காலத்தில் மிகவும் லேசான துணிகளையும், வெளிர் நிற ஆடைகளையும், உலர்வதற்கு அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளும் ஜீன்ஸ் போன்ற கனமான துணிகளையும் அணிவகை தவிர்க்க வேண்டும்.
மழைக்காலங்களில் வெயில் அதிகமாக இருக்காது என்பதால் சன்ஸ் ஸ்கிரீன் பூசுவதை தவிர்க்கக்கூடாது .
தண்ணீர் பட்டாலும் அழியாத வகையில் இருக்கும் வாட்டர் ப்ரூஃப் மேக்கப் பொருட்களை உபயோகிப்பது நல்லது.
மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிக ஈரப்பதம் காரணமாக சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகரிக்கும்.
இதனால் முகப்பரு பிரச்சனை வரக்கூடும்.
எனவே மழைக்கால பயணத்தின் போது ஃபேஸ் டிஷ்யூக்களை உடன் வைத்துக் கொள்வது நல்லது.
மாதவிடாய் நாட்களின் போது பயணம் மேற்கொள்ளும் பெண்கள் மழைக்காலத்தில் கூடுதல் எண்ணிக்கையில் சானிட்டரி நாப்கின்களை வைத்துக்கொள்ள வேண்டும் .
மாதவிடாய் வலிகளை குறைக்கக்கூடிய ஹார்ட் வாட்டர் பேக்கையும் உடன் எடுத்துச் செல்வது நல்லது.
மழைக்கால பயணத்தின் போது தலையில் அதிக அளவு எண்ணெய் பூசுவதை தவிர்க்க வேண்டும்.
மழையில் நனைய நேரிட்டால் தலைமுடி உணர்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதே இதற்கு காரணம்.
இதனால் காய்ச்சல் , சளி, தலைவலி போன்ற பாதிப்புகள் வரக்கூடும் .
மழை நீரில் நடக்கும் போது வலுக்காமல் இருக்கும் வகையிலான காலணிகளை அணிய வேண்டும்.
ஹீல்ஸ் போன்ற காலணிகளை தவிர்க்க வேண்டும்.
மழைக்காலங்களில் பெரும்பாலும் வெளியிடங்களில் வாங்கி சாப்பிடுவதை தடுக்க வேண்டும்.
நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரை எப்போதும் உடன் வைத்திருப்பது நல்லது.