கீரை சாறுகளும் பயன்களும்
முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள், சீரகம், மிளகு, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க விட்டு வெந்தவுடன் இறக்கி வடிகட்டி அருந்திட ரத்த அழுத்தம் சீராகும்.
ரத்த சோகை குணமாகும் .
பசலைக் கீரையுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேகவைத்து அருந்த உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும் .
தைராய்டு நோய் குணமாகும்.
வல்லாரைக் கீரை, பயத்தம் பருப்பு, மிளகு, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு அருந்த ஞாபக சக்தி அதிகமாகதுடன் தோல் நோய்கள் குணமாகும்.
முடக்கத்தான் கீரை , சின்ன வெங்காயம், சுக்குப்பொடி, சீரகத்தூள், உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்கவிட்டு பின் வடிகட்டி அருந்த முதுகுத்தண்டு வலி, வாத நோய், பக்கவாதம் முதலிய நோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.
முள்ளங்கி கீரையை அப்படியே வேக வைத்து சூப்பாகவோ , சாறாகவோ அருந்த சிறுநீரக கற்கள் கரையும்.
வாயுவை அகற்றி மலச்சிக்கலை போக்கும் .
சிறு கீரையோடு ஒரு பிடி சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி சேர்த்து நீர் விட்டு கொதித்ததும் உப்பு சேர்த்து இறக்கி வடிகட்டி வெண்ணை சேர்த்து அருந்த உடல் பருமன் குறையும் .
பித்த நோய்கள் அகலும்.
பருப்பு கீரை, ஊற வைத்த வெந்தயம் போட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வேகவிட்டு வடிகட்டி சீரகத்தூள் , உப்பு சேர்த்து அருந்த பித்தம் தணியும் .
நீர் கடுப்பு , நீர் சுருக்கு எரிச்சல் குணமாகும் .
தூதுவளைக் கீரையுடன் சீரகம் , பூண்டு சிறிது நீர் விட்டு கொதித்ததும் வடிகட்டி அருந்தி வர வயிற்று பூச்சிகள் அகலும்.
இரத்தத்தை தூய்மையாக்கி நெஞ்சகப் பிரச்சனைகள் சுவாசக் கோளாறுகளை போக்கும்.
கரிசலாங்கண்ணி வேக வைத்து அருந்த ஆரம்ப நிலை புற்று கட்டிகள் சரியாகும்.
முடியின் வேர்க்கால்களுக்கு பலமளித்து முடி வளர்ச்சிக்கு உதவும்.
கொடி, பசலைக்கீரையை வேக விட்டு வடிகட்டி சிறிது கற்கண்டு சேர்த்து அருந்தி வர உடல் சூடு தணியும்.
துத்திக் கீரையுடன் கடுக்காயை தட்டி போட்டு நீர் விட்டு உப்பு போட்டு கொதித்ததும் அருந்த வெள்ளைப்படுதல் குணமாகும்.
மணத்தக்காளி கீரையை சாறாக அருந்த வயிற்றுப் புண்ணை ஆற்றும் உடல் எடை குறைவதோடு தொப்பையை குறைக்கும்.
நச்சுக்கொட்டை கீரை, மிளகு, சீரகம் உப்பு , பூண்டு, தக்காளி, வெங்காயம் போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வர கழுத்து வலி குணமாகும். குடல் புண்கள் ஆறும்.