சுரைககாய் சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்
சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரகக் கோளாறு ஏற்படாது. உடல் சூடு குறையும்.
சுரைக்காயில் வைட்டமின் சி , பி சத்துக்கள் உள்ளன.
நீர்ச்சத்து 96.07% ,இரும்பு சத்து 3.2 %, தாது உப்பு 6.5% ,பாஸ்பரஸ் 0.2% , புரதம் 0.2%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துக்களை கொண்டது.
சுரக்காயின் சதைப்பகுதியை ரசமாக்கி அத்துடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து பருகிவர சிறுநீரக கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.
சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல் ஆகியவைகளுக்கு சிறந்தது.
செரிமான கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிட்டு வரலாம்.
கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது .
மேலும் நா வறட்சியை போக்கும்.
கை, கால்களில் எரிச்சல் உள்ளவர்கள் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதை பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.
உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம் .
நீரழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.
வெப்பத்தினால் வரும் தலைவலிக்கு சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் 10 போட தலைவலி நீங்கும்.
சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வர உடல் சூடு தணியும் வெப்ப நோய்கள் எதுவும் உண்டாகாது.
மனிதன் உடலில் உள்ள தேவையற்ற வியர்வை , சிறுநீர் வழியாக வெளியேற்றும் .
சுரைக்காயின் இலைகளை நீர் விட்டு ஊற வைத்து அந்த நீரை பருகி வந்தால் வீக்கம் , பெருவயிறு, நீர்க்கட்டி நீங்கும் .
காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம் .
சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலை அடையும் .
சுரைக்காய் நரம்புக்கு புத்துணர்வு கொடுத்து உடலை வலுப்படுத்தும்.