சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா?
சாப்பிடும் நேரத்தில் நாம் தண்ணீரை அருகில் வைத்துக் கொண்டுதான் சாப்பிடவே அமர்வோம் .
இது எதற்காக என்றால், சாப்பிடும் போது உணவு தொண்டை குழியில் அடைத்துக் கொண்டாலோ அல்லது காரமாக சாப்பிட்டு விட்டாலோ அதை தவிர்க்க தண்ணீரை அருகில் வைத்துக் கொள்கிறோம் .
ஆனால் சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் அருந்தலாமா? என்றால் அது முற்றிலும் தவறான முறை என்று கூறுகின்றனர் மருத்துவர்கள் .
இதுகுறித்து தெரிந்து கொள்வோம் :
பொதுவாக சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது.
அப்படி குடித்தால் ஜீரண கோளாறுகள் உண்டாகும் .
மேலும் வயிற்றில் உள்ள செரிமான நொதிகளை நீர்த்து போக செய்வதால் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணம் ஆகுவதுடன் நம் உடலில் சில அமிலங்கள் சுரக்கும்.
சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் போகும்.
அதன் வீரியம் குறைந்து ஜீரண கோளாறுகள் உண்டாகும்.
இது தொடர்ச்சியாக நிகழும் போது வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
எனவே பொறுமையாக, அளவாக சாப்பிட்டால் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை ஏற்படாது.
சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் நீரை முழுவதுமாக குடிப்பார்கள். அதுவும் தவறான முறையாகும் .
சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.
மேலும் சாப்பிட்டு உடனேயே தண்ணீர் குடிப்பது அத்தியாவசிய வயிற்று அமிலங்கள் மற்றும் என்சைவுகளை நீர்த்துப் போகச் செய்யும்.
இது செரிமானத்தை மெதுவாக்குகிறது.
மேலும் உணவிற்கு பிறகு உடனடியாக தண்ணீர் குடிப்பது முக்கியமான ஊட்டச்சத்துக்களை திறம்பட உறிஞ்சுகிறது .
எனவே தேவைப்பட்டால் மட்டுமே கொஞ்சமாக எடுத்துக் கொள்வது நல்லது ..
தண்ணீர் அருந்தும் முறை
சிறந்த செரிமானம் மற்றும் ஆரோக்கியத்திற்கு சாப்பிட்ட பிறகு 30 நிமிட இடைவெளிக்கு பிறகு தண்ணீர் அருந்த பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த இடைவெளி செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைக்கிறது.
மேலும் உடலும் போதுமான அளவு நீர் ஏற்றத்துடன் இருப்பதை உறுதி செய்யும்.
அவ்வளவு நேரம் பொறுக்க முடியாது என்றால் சாப்பிட்டு இருபது நிமிடங்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிக்க ஆரம்பிக்கலாம்.
அதுபோன்று சாப்பிடுவதற்கு முன்னரும் தண்ணீர் குடிக்க கூடாது.
ஏனென்றால் வயிற்றுக்கு தேவையான அளவு உணவை சாப்பிட முடியாமல் போய்விடும் .
அத்தோடு உணவில் உள்ள சத்துக்கள் சரியாக உடலுக்கு கிடைக்காது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லது அல்லது குறைந்தபட்சம் உணவுக்கு பத்து நிமிடங்களுக்கு முன்னராவது தண்ணீர் குடிக்கலாம்.