கர்ப்பிணிக்கள் எத்தனை முறை ஸ்கேன் எடுக்கலாம்?
பொதுவாக கர்ப்பம் தரித்ததிலிருந்து வெளிவர நான்கு ஸ்கேன் பரிசோதனைகள் போதுமானது.
ஆறாவது வாரத்தில் அதாவது ஒன்றரை மாதம் மேற்கொள்ளப்படும் முதலாவது ஸ்கேன் கருத்தரிப்பை உறுதி செய்யவும், தரித்த கருப்பம் கர்ப்பப்பைக்கு உள்ளையா ? வெளியயையா ? என்று அறியவும் கருவின் துடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் உதவும்.
இரண்டாவது ஸ்கேன் 11 முதல் 14 வாரங்களுக்கிடையே ஏறத்தாழ 3 முதல் 3 அரை மாதங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
குரோமோசோம் கோளாறினால் மூளை வளர்ச்சி குன்றி உருவாகும் டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு இருப்பின் இந்த ஸ்கேனில் கண்டறியப்படும்.
அடுத்து நாலரை மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் செய்யப்படும் மூன்றாவது ஸ்கேனில் தண்டுவடம், இதய கோளாறு தாய் சேய் இடையான சீரான ரத்த ஓட்டம் போன்றவற்றை தெளிவுபடுத்திக் கொள்வார் மருத்துவர்.
நான்காவது ஸ்கேன் 36 ஆவது வாரத்தில் அதாவது ஒன்பதாவது மாதம் செய்யப்படுகிறது.
குழந்தையின் பொசிஷன், தாய் சேய் இணைப்புத் திசுவான பிளசான்டாவின் நிலை, பணிக்குட நீரளவு, குழந்தையின் வேறுபட்ட அசைவுகள் இவற்றை ஆராய உதவுவதோடு டெலிவரி தினத்தையும் நார்மலா அல்லது சிசேரியனா என்பதையும் முடிவு செய்யவும் பேரு உதவியாக இருக்கும் .
கருவுற்ற தாய்க்கு பிபி , சுகர் போன்ற பிரச்சனைகள் இருப்பின் மாதமாதம் ஸ்கேன் பார்த்தே ஆக வேண்டும். ஏனெனில் தாய் இந்த இரண்டு கோளாறுகள் காரணமாக பனிக்குடத்தில் நீர் வற்றுவது சேய் வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இவற்றைக் கண்காணித்து சரியான மருத்துவத்தை பரிந்துரைக்க மாதம்தோறும் ஸ்கேன் அவசியமாகிறது.
ஸ்கேன் செய்வதால் காது பாதிக்கும், இதயம் பாதிக்கும் என்பதெல்லாம் செவி வழியாக சொல்லப்படுவதை தவிர எந்த வகையிலும் நிரூபணம் ஆனது இல்லை.