குட்டீஸ்களுக்கான டிப்ஸ்
வீட்டில் எவ்வளவு தான் செல்வம் இருந்தாலும் குழந்தை செல்வம் இருந்தால் தான் நிறைவான மகிழ்ச்சி கிடைக்கும்.
அப்படிப்பட்ட குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு தாய்மார்களும் விரும்புகின்றனர் .
நீங்களும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க வேண்டும் எனில் அதற்கு கர்ப்பத்திற்கு முன்பிருந்தே தயாராக வேண்டும்.
மாதவிடாய் சுழற்சியை கண்காணிப்பதில் தொடங்கி அன்றாட வாழ்க்கையில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே அதிக சிரமம் இல்லாமல் ஆரோக்கியமான குழந்தையை பெற்று விடலாம்.
கர்ப்பம் தரிப்பதில் எடை முக்கிய பங்கு வகிக்கிறது .
குறைந்த எடை அல்லது அதிக எடையுடன் இருத்தல் என இரண்டு நிலைகளுமே உங்கள் உடலில் கரு உருவாவதை கடினமாக்குகின்றன.
ஆரோக்கியமான குழந்தையை பெற ஆரோக்கியமான உடல் எடை தேவை.
சரியான உடல் எடையை பெற தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
கர்ப்பத்துக்கு முன் தாய் எடுக்கும் உணவே குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.
உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை பெறுவதற்கு பயிர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்கவும் .
அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
போலிக் அமிலம் போதிய அளவு பெற இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
இரும்பு சத்து நிறைந்த உணவுடன் வைட்டமின் சி எடுத்துக் கொள்ள வேண்டும் .
இவையெல்லாம் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்தால் பெரிய பலனை அளிக்க கூடியவை .
குழந்தை பிறந்தவுடன் சீம்பால் கொடுக்க வேண்டும்.
பிறகு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே அளிப்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்று.
அதன் பின்னர் ஏழு மாதம் முதல் இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு அவர்களின் வாழ்நாள் முழுவதும் தேவையான ஆரோக்கியத்திற்கு உறுதுணை புரியும்.
எனவே இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சத்துக்கள் நிறைந்த உணவுகளை வழங்குவது முக்கியமான ஒன்று .
இதன் மூலம் குழந்தையை ஆரோக்கியமாகவும், அழகாகவும், புத்திசாலியாகவும் வளரும்.
என்னென்ன உணவு தரலாம்
ஏழாவது மாதம் முதல் குழந்தைகளுக்கு மசித்த சாதம், கஞ்சி, நெய், காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்க்க வேண்டும் .
இதன் அளவு ஏழாவது மாதத்திலிருந்து மூன்று முதல் நான்கு வேளை உணவாகவும் 75 கிராம் அளவில் ஆரம்பித்து படிப்படியாக அதிகரித்து இரண்டாவது வயது முடிவில் சுமார் 200 கிராம் வரை கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு முருங்கைக் கீரையை நன்றாக வேகவைத்து மசித்துக் கொடுத்து வரலாம்.
இதன் மூலம் உடலில் ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.
பட்டாணியை மசித்து காெடுக்கலாம்.
இது எலும்புகளை வலுப்படுத்தும்.
பட்டாணியில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் சதை வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது .
கேரட் வேக வைத்து மசித்து கொடுத்து வரலாம் .
இதன் மூலம் கண் பார்வை மேம்படும்.
மாதுளை பழத்தை ஜூஸ் போட்டு மதிய வேளையில் கொடுத்து வரலாம்.
இதனால் ரத்த உற்பத்தி அதிகமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகமாகும்.