அருமருந்து கிராம்பு

அருமருந்து கிராம்பு 
தினமும் 2 கிராம்பை மென்று தின்றால் பித்தம் குறையும் .

வாய் துர்நாற்றம் அகலும்.

 கிராம்பு பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தினால் ஈறு வீக்கம், பல் வலி, வாய் நாற்றம் சரியாகும்.

 கிராம்பு, மிளகு, வெற்றிலையை மென்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

 சுக்கு, கிராம்பை கசாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி சரியாகும்.

 கிராம்பு, சிறிதளவு உப்பு இவற்றை அறைத்து பசும்பாலில் கலந்து நெற்றியில் தடவினால் தலைவலி வராது .

கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தினால் வறட்டு இருமல் நீங்கும்.

 கிராம்பு பொடியை வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். சளி குறையும் .

சிறிது அளவு சமையல் உப்புடன் கிராம்பை சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் ,கரகரப்பு நீங்கும் .

துளசிச் சாறுடன் தேன், கிராம்புத்தூள் சேர்த்து சாப்பிட நரம்பு தளர்ச்சி நீங்கும்.

 கருவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட தோல் நோய்கள் மாயமாகும் .

மூன்று துளி கிராம்பு எண்ணெய், சிறிதளவு தேன், வெள்ளை பூண்டுச்சாறு சேர்த்து படுக்கைக்கு செல்லும் முன்பு சாப்பிட்டால் ஆஸ்துமா கட்டுப்படும் அல்லது 30 மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்தும் குடிக்கலாம்.

 பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் கருப்பையின் வலிமைக்கும் கருப்பையானது சுருங்கி விரிவதற்கும் கிராம்பு பயன்படுகிறது.
 இடுப்பு வலி, மூட்டு வலி, தொடை நரம்பு வலி, தசை பிடிப்பு போன்ற பகுதிகளில் கிராம்பு எண்ணையை தடவலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை