கோடையை குளிர்விக்கும் முலாம்பழம்
கோடை காலம் தொடங்கி விட்டாலே அனல் காற்று, தாகம், வெப்பம், எரிச்சல் போன்றவை கோடையில் வாழும் பிரச்சினைகள் ஆகும் .
எனவே பல்வேறு உணவுகள், பழங்கள், பானங்கள் இவற்றை பயன்படுத்தி கோடையே சமாளிக்கிறோம்.
அந்த வகையில் முலாம்பழம் ஒரு சிறந்த பழம் ஆகும்.
இப்பழம் நா வறட்சியை நீக்கி நமது உடலை குளிர்விப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
சத்துக்கள்
ஆப்பிரிக்க பகுதியை தாயமாக கொண்ட முலாம்பழத்தில் புரதச்சத்து, நீர்ச்சத்து, உலோகச்சத்து மற்றும் கொழுப்பு, நார்ச்சத்து, மாவு சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தயாமின், ரிப்போ பிளவின், நியாசின் விக்னீசியம், சோடியம் , பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் மற்றும் ஆக்ஸாலிக் அமிலம் போன்றவைகள் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்
முலாம்பழத்தை உண்டுவர மலச்சிக்கல் நீங்கும் .
முலாம்பழம் சிறுநீரைப் பெருக்கி உடலில் வெண்மையை தணித்து குளிர்ச்சி ஊட்டும்.
சிறுநீரகக் கோளாறுகள், நீர் கடுப்பு இவற்றை குணப்படுத்தும் மற்றும் சிறுநீரகக் கற்களை கரைக்கும் தன்மை உடையது.
முலாம் பழத்தின் பழச்சாறு தாகத்தை தீர்த்து தொண்டை வலியை குணப்படுத்தும்.
பழ சர்ப்பத்தோடு இனிப்பு சேர்த்து அருந்தி வர சொறி, சிரங்கு, இருமல் ஆஸ்துமாவே குணப்படுத்தும்.
முலாம் பழத்தின் பழச்சாறு பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை கூட்டும்.
பழத்தை கூளாக்கி எக்ஸிமா எனப்படும் தோல் நோய் மேல் தேய்த்துவர விரைவில் நோய் குணமாகும்.
பழ சதையோடு சர்க்கரை பால் சேர்த்து சாப்பிட கோடைகால வெப்பம் தணியும்.
தலை சூடு குறையும்.
முலாம்பழத்தின் விதைகளை சேகரித்து காயவைத்து பொடியா பொடித்து உண்ண வயிற்று புழுக்கள் விலகும்.
விதைகளை அரைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மேல் பூசி வர கரும்புள்ளிகள் மாறும்.
முலாம் பழத்தின் காயை கூட்டு போன்று சமைத்து உண்ண சுவையாக இருக்கும்.
முலாம்பழ கொடியின் வேரை கசாயம் செய்து கொடுத்தால் வாந்தியை நிறுத்தும்.
பழத்தை பால் விட்டு பிசைந்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகம் பளபளப்பாகும் .
கோடையினால் ஏற்பட்ட தோல் சுருக்கம் மாறும்.
முலாம்பழம் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும்.
கீழ்வாதத்தை குணப்படுத்தும்.
கண் எரிச்சல், கண் சூடு மாறி கண் குளிர்ச்சி பெறும்.
வெப்பத்தால் ஏற்படும் சிறுநீர் தாரை எரிச்சலை இப்பழம் குணப்படுத்தும்.