மருந்தாணி வைப்பதால் என்ன பயன்
மருந்தாணி இலையிலிருந்து பெறப்பட்ட மருந்தாணி எண்ணெயை தலைக்கு அடிக்கடி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணத்தைத் தணித்து நரம்புகளை குளிர்ச்சியாக்கி தூக்கமின்மை பிரச்சனையை நீக்குகிறது .
மருந்தாணி இலைகளை அரைத்து கைகளில் ஏற்றுக் கொள்வதால் கையில் இருக்கும் முரட்டு தன்மை நீங்கும். மன அழுத்தங்களை குறைக்கும் .
மருதாணி விரல்களின் நகங்களின் மீது இட்டுக் கொள்வதால் நகச்சுற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் ரத்தம் கட்டிக் கொள்ளும் நிலை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருந்தாணிக்கு உண்டு.
இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள் மருந்தாணி இலை தண்ணீரை பருகி வருவது நல்லது.
மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலைவலி ஏற்படும் போது நெற்றியில் தடவி வந்தால் எப்படிப்பட்ட தலைவலி பிரச்சினைகளும் தீரும் .
மருந்தாணியை உள்ளங்கை மற்றும் பாதத்தில் வைப்பதால் அதிலுள்ள குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைக்கிறது .இதனால் உடல் வெப்பத்தால் ஏற்படும் தோல் நோய்கள், வயிற்றுப் பாதைகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது.
மருந்தாணி இலைகளை நீரில் ஊற வைத்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை கம்மல் குணமாகும்.
மருதாணி பூவினை ஒரு துணியில் சுற்றி தலைமாட்டில் வைத்து படுத்தால் தூக்கம் நன்றாக வரும்