மண்பானையில் அறிவியல் ரகசியம்
ஏழைகளின் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் மண் பானையை வெயில் காலத்தில் அனைவரும் வாங்க ஆரம்பித்துள்ளனர் .
இந்தப் பானை வெயில் காலம் மட்டுமல்லாமல் அனைத்து காலங்களிலும் பயன்படுத்தலாம்.
மண்பானையில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் வெயில் பட்டையை கிளப்பினால் இதில் உள்ள தண்ணீர் ஜில்லென்று இருக்கும் .
அதே சமயம் வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண் பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும்.
மண்பானைகளில் நுண் துளைகள் நிறையவே இருக்கின்றன.
தண்ணீரை நிரப்பப்பட்டு இருக்கும் மண் பானைகளின் வெளியே முத்து முத்தாய் உயர்த்திக்க இதுதான் காரணம்.
மண் பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வெளியேற்ற செய்யும்.
நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கும் பானையின் வெப்பமும் பானையின் உள்ளே இருக்கும்.
நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவியாகல் மூலம் வெளியேறப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும்.
வெளிப்புற காற்றின் தன்மையை பொருத்தும் நீர் குளிர்ச்சி அடையும் தன்மையும் மாறும் பானையை சுற்றி வெளிப்புற வெப்பம் அதிகமானால் நீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறும் .
ஆவி, அதன் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக மாறுகிறது.
இதற்காக மண்பானையில் நீண்ட நேரம் நீரை வைத்து குளிரச் செய்தால் அது அப்படியே ஐஸ்கட்டி ஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
நவீன கால பிரிட்ஜ்கள் போல பற்களை நடுநடுங்க செய்யும் அளவுக்கு மண் பானை தண்ணீர் குளிர்விக்காது.
ஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும் என்று கேட்டால் அரை வெப்பநிலையை விட வெறும் ஐந்து டிகிரி செல்சியஸ் குறையும் அளவுக்குத்தான் குளிர்விக்கும்.
வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் என்றால் மண் பானையில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.