இன்று முதல் காதலர் தினம் ஆரம்பம்

இன்று முதல் காதலர் தினம் ஆரம்பம்


வாலண்டைன் ஸ்டே வாரம் 

 பிப்ரவரி 7 - ரோஜா தினம் 

பிப்ரவரி 8 - காதலை சொல்லும் தினம்

 பிப்ரவரி 9 - சாக்லேட் தினம் 

பிப்ரவரி 10 - பரிசளிக்கும் தினம்

 பிப்ரவரி 11 - சத்தியம் செய்யும் தினம்

 பிப்ரவரி 12 - கட்டித் தழுவும் தினம்

 பிப்ரவரி 13 - முத்தம் தினம் 

பிப்ரவரி 14 - காதலர் தினம்

காதலர் தினம் எப்படி பிறந்தது?

 கிபி 200 ஆம் நூற்றாண்டில் ரோமப்பே பேரரசை ஆண்டு வந்த கிளாஸ்டியஸ் மன்னனின் அரசாட்சியை தோல்வியடைந்து விட்டது என்ற விமர்சனம் இருந்தது.

 மன்னன் அண்டை நாடுகளை கைப்பற்றுவதிலும், போர் தொடுப்பதிலும் மிகத் தீவிரமாக இருந்து வந்தார் .

தனது ராணுவத்தில் உள்ள வீரர்கள் எந்தவித பயமும் தயக்கமும் இல்லாமல் சண்டையிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

 குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் மக்கள் ராணுவத்தில் சேர மறுப்பதாக மன்னர் நினைத்தார் .

அதன் விளைவாக மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தார்.

 இதை எதிர்த்த பாதரியார் வாலண்டைன் நிறைய ரகசிய திருமணங்களை செய்து வைத்தார்.

 மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையில் அடைக்கப்பட்டு கிபி 270 ஆம் ஆண்டு பதினொன்றாம் நாள் கொலை செய்யப்பட்டார் .

அந்த நாளே காதலர்தினமாக கொண்டாடப்படுகிறது.

 காதலர் தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ்.

 கிபி 498ல் இவர் பிப்ரவரி 15ஆம் தேதியை காதலர் தினமாக அறிவித்தார்.

 அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக இருந்தது.

 சீனர்களிடம் 'ஏழின் இரவு' என்று சொல்லப்படும்.

 இந்த காதலர் தினமும் ஏழாவது மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது.

 ஜப்பானில் ஜூலை 7ஆம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள்.

 காதலர் தினத்திற்கு முந்தைய ஒரு வாரம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும்.

 ரோஜா தினம்
பிப்ரவரி 7ஆம் தேதி அன்று முதல் நாள் ரோஜா தினம்.

 இந்த நாளில் காதலர்கள் ஒருவர் கொருவர் சிவப்பு ரோஜாவை கொடுத்துக் கொள்கின்றனர் .

காதலை சொல்லும் தினம் 
அடுத்த பிப்ரவரி 8ஆம் நாள் காதலை சொல்லும் தினமாக கொண்டாடப்படுகிறது .

இந்த நாளில் காதலர்கள் ரோஜா அல்லது மோதிரம் கொடுத்து தங்கள் காதலை கூறுகிறார்கள்.

 யாரிடம் காதல் கூறப்படுகிறதாே அவர் மறுக்கலாம் ஆனால் இது பற்றி கவலைப்படாமல் இதயத்தை திறந்து காதலை சொல்ல வேண்டும்.

 சாக்லேட் தினம்
அடுத்து மூன்றாம் நாள் சாக்லேட் தினம்.

 இந்த நாள் பிப்ரவரி ஒன்பதாம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

 காதலை சொன்ன பிறகு சாக்லேட் கொடுக்கப்படுகிறது.

 பரிசு தினம்
நான்காம் நாள் பரிசு பொருள் வாங்கி கொடுக்கும் தனமாக கொண்டாடப்படுகிறது.

 இதை பிப்ரவரி 10ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

 இந்த நாளில் காதலன் காதலிக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கிறான்.

 சத்தியம் செய்யும் தினம்
அடுத்து பிப்ரவரி 11ஆம் நாள் காதலர்கள் ஒருவருக்கொருவர் உறுதி கூறும் நாள்.

 உனக்காக நான் இருப்பேன்.

 எப்போதும் உன்னை நேசிப்பேன் என்று சத்தியம் பரிமாறிக் கொள்ளும் நாளாகும் .

கட்டித் தழுவும் நாள்
வாரத்தின் ஆறாம் நாள் அதாவது பிப்ரவரி 12ஆம் நாள் கட்டித்தழுவும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

 இந்த நாளில் காதலர்கள் கட்டித் தழுவி கொள்கிறார்கள் .

முத்தம் நாள் 
கட்டித்தழுவிய பிறகு முத்தங்கள் பரிமாறிக்கொள்ள வேண்டியதுதானே!

 பிப்ரவரி 13ஆம் நாள் காதலர்கள் முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் நாளாக கொண்டாடப்படுகிறது.

 காதலர் தினம்
பிப்ரவரி 14-ஆம் நாள் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

 காதல் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு நொடியாவது வந்து போகும்.

 காதல் தவறு என்று யாரும், எந்த இலக்கியங்களும் கூறவில்லை.

 ஆனால் இன்று வணிக மாயமாக்கப்பட்டு விட்டது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

 

கருத்துரையிடுக

புதியது பழையவை