குழந்தைகளை இப்படியும் சாப்பிட வைக்கலாம்
குழந்தைகளை சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவு சொல்ல வேண்டும்.
சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகள் உட்கார ஆரம்பிக்கும்போதே எல்லோருடனும் சேர்ந்து தட்டில் சாப்பிட சொன்னால் எல்லா வகை உணவையும் சாப்பிட்டு கற்றுக்கொள்ளுவார்கள்.
டிவி, செல்போன் பார்த்துக் கொண்டாே? வெளியில் அழைத்துச் சென்றோ? சோறு ஊட்ட வேண்டாம்.
நொறுக்கு தீனியை தர துவங்கும் போது பழங்கள், பச்சை காய்கறிகளை ஸ்னாக்ஸ் ஆக அறிமுகப்படுத்தலாம்.
மாற்றத்தை குழந்தைகளும் விரும்புவர்.
அதனால் விதமாக சமைத்துக் கொடுப்பது அவசியம்.
சீக்கிரம் சாப்பிடுவது என்று அவசரப்படுத்தாமல் மெதுவாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும்.
காலை டிபன், மதியம், இரவு உணவுகளை சரியான நேரத்திற்கு கொடுத்து பழக்க வேண்டும்.
அப்போதுதான் அந்தந்த நேரத்தில் தானாகவே பசி எடுக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அன்பாக கொடுத்தால்தான் ஆசையாக சாப்பிடுவார்கள்.
பொறுமையோடு கொடுத்து அவர்களின் போக்கு என்று வழி கொண்டு வந்தால் குழந்தைகள் எந்த உணவையும் விரும்பி சாப்பிடுவார்கள்.