கரும்பு வாங்கலியோ பாெங்கல் கரும்பு
பொங்கல் பண்டிகை என்றதும் நம் நினைவுக்கு வரும் பொருட்களில் கரும்பும் ஒன்று.
கரும்பின் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
கரும்பு குளிர்ச்சி தன்மை உடையது. கரும்பு கிடைக்கும் சீசனில் தேவையானதை உண்டு வர குடல்புண், மூலம், வெட்டை சூடு இவைகளை குணப்படுத்தும்.
பித்தத்தை நீக்கும். புண்களை ஆற்றும்.
மேலும் கிருமி நாசினியாகவும், மலமிளக்கியாகவும் செயல்படும்.
கரும்பிற்கு ஜீரண சக்தியை தூண்டும் தன்மை உள்ளது.
பயன்படுத்தும் முறை
கரும்புச் சாறுடன் இஞ்சி சாறு கலந்து அருந்த வலிப்பு குணமாகும்.
கரும்புச்சாறு உடல் சூட்டை குறைக்கும்.
ஒரு கப் கரும்புச் சாறுடன் சிறிதளவு வெல்லம், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்.
கரும்பு சர்க்கரையும் சில வகை மருத்துவ குணங்களைக் கொண்டதாகும்.
சர்க்கரை கலந்த நீரால் புண்களை கழுவி வர புண்கள் ஆறும் .
கரும்புச் சாறுடன் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வர பித்தம் குறையும். உடல் சூடு, குடல் புண், மூலம் போன்றவை குணமாகும்.
கரும்பு சாறுடன் சிறிதளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வர மலச்சிக்கல் தீரும்.
கரும்பு கற்கண்டு தாது வலிமையை கூட்டும்.
பாலில் கரும்பு கற்கண்டு ,முருங்கை பூ சேர்த்து காய்ச்சி தினமும் இரவு ஒரு கப் அருந்தி வர தாது புஷ்டி ஏற்படும் .
திடீர் விக்கலுக்கு சர்க்கரை சிறிதளவு சாப்பிட்டால் விக்கல் நிற்கும் .
நீண்ட நேரம் பேருந்தில் அல்லது வேறு விதத்தில் பயணம் செய்தால் ஏற்பட்ட உடல் சூட்டுக்கு கரும்புச்சாறு அருந்த சூடு தனியும்.
நீரில் கரும்பு வேறை இட்டு காய்ச்சி அரைக்கப் விதம் இரு முறை குடிக்க சிறுநீர் கடுப்பு தீரும்.
சர்க்கரை கலந்த நீரால் கண்களை கழுவ புகையால் பாதிப்பான கண்கள் நலம்பெறும் .
வாரத்தில் இரு நாட்கள் கரும்புச்சாறு பருகலாம்.
தினசரி பருகக் கூடாது.
அப்படி தொடர்ந்து பருகினால் வெட்டை சூடு, ஜலதோஷம், நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.