குளிர்கால லைப் ஸ்டைல்
சுறுசுறுப்பாக ஓடி ஆடிக் கொண்டிருப்பவர்களுக்கு சுவாச நோய் தொற்றுகள் 25 சதவீதம் குறைவாகவே ஏற்படுகின்றன. வாக்கிங், ஜாக்கிங், உடற்பயிற்சி என தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வியர்வை சிந்துவது நல்லது.
உடல் இப்படி இயங்கும்போது இரத்த வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன . இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அதை தவிர்க்கக்கூடாது.
மதிய உணவு ஆரோக்கியமானதாக இருப்பது அவசியம் .
குறிப்பாக உணவில் புரதச்சத்து அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி, முட்டை, பருப்பு போன்றவற்றில் புரதம் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்.
புரதம் இல்லாத உணவை சாப்பிடுபவர்களுக்கு ஜலதோஷம், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மாலையில் காபி குடிப்பதையும், கூடவே நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
கிரீன் டீ குடிப்பது இதமும், நலமும் தரும்.
கிரீன் டீ போன்ற தேயிலைகளில் காணப்படும் ஈ ஜி சி ஜி என்ற வேதிப்பொருட்கள் வைரஸ் உடலில் வளர்வதை தடுக்கிறது.
மழை மற்றும் பனிக்காலத்தில் ஒரே கர்சீப்பை நீண்ட நேரம் பயன்படுத்தக் கூடாது.
சாப்பிட்டுவிட்டு கை துடைத்து அதே ஈரத்தோடு வைக்கும் கர்ச்சீஃப் நோய் கிருமிகளையும் சேர்த்தே வைத்திருக்கும்.
திரும்பவும் அதை எடுத்து முகம் துடைக்கும் போது சுலபமாக நோய் தொற்றிக் கொள்ளும்.
ஜலதோஷ வைரஸ் தாக்கிய மனிதர்களில் மூன்றில் இரண்டு பேருக்கு அந்த நோய் அறிகுறியே தெரியாது. அதனால் உங்களை சுற்றி உள்ள நபர்களில் யாரிடமிருந்து வைரஸ் பரவும் என்பதே மர்மம்.
எனவே குளிர்காலத்தில் கர்ச்சீப்பை அடிக்கடி மாற்றவும்.
துவைக்கும் போது கிருமி நாசினியில் ஊற வைத்து உலர்த்துவதும், அயர்ன் செய்து பயன்படுத்துவதும் நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
இது எல்லாவற்றையும் போலவே தூக்கமும் முக்கியம் 4 மணி நேரம் மட்டுமே ஒரு நாள் தூங்கினால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி 50% குறைய வாய்ப்புள்ளது.
அது முழு சக்தியோடு விழித்திருக்க நீங்கள் போதுமான அளவு தூங்க வேண்டும்.