ஜிபே போன் பே தப்பாச்சுனா பே .... பே....

ஜிபி போன் பே புது மோசடி

ஜி பே போன் பே புது மோசடி எப்படி நடக்கிறது.

 டிஜிட்டல் பணவர்த்தனை இன்று நமது வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது .

பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை பலவற்றுக்கும் யூ பி ஐ வசதியை பயன்படுத்தியே பணம் செலுத்துகிறோம்.

 இந்த முறை மிக எளிதாகவும் உள்ளது.

 இந்நிலையில் இதிலும் மோசடிகள் அரங்கேற தொடங்கியுள்ளன.

 ஜிபே மூலம் இப்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுயுறுத்தியுள்ளது .

இது என்ன மோசடி ? இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

 ஜி பேயில் ஒருவருக்கு பணம் அனுப்புவது போல் ஒருவரிடம் இருந்து பணத்தை கேட்டு பெறவும் முடியும்.

 இந்த இரண்டாவது செயல் பற்றிய மக்களின் அறியாமையே பயன்படுத்தியே இப்போது மோசடிகள் நடைபெற்று வருகின்றன. 

சில சமயம் சிலர் ஜி பேயில் பணம் போடும்போது கவனக்குறைவாய் தவறுதலாக வேறு ஒருவர் எண்ணை குறிப்பிட்டு மாற்றி பணத்தை போட்டு விட்டார்கள்.

 அப்படி நாம் ஒருவருக்கு மாற்றி பணத்தை போட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து நம் நிலைமையை சொல்லி பணத்தை திருப்பி கேட்டு வாங்கிக் கொள்வோம்.

 இதுபோல் யாராவது நமக்கு தவறுதலாக பணத்தை போட்டு இருந்தால் அதை அவர்கள் கேட்டதும் திருப்பி கொடுத்துவிடுவோம் -

இந்த நடைமுறையைதான் ஜி பே புது திருடர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

 முதலில் நமக்கு ஒரு 500 ரூபாயை போடுவார்கள் .

பின்னர் நம்மை அழைத்து தவறுதலாக உங்க உங்கள் கணக்கில் 500 ரூபாய் போட்டு விட்டோம் திருப்பி போட்டு விட முடியுமா? என்று கேட்பார்கள்.

 நாமும் உடனே இறக்கப்பட்டு பணத்தை போடுவோம் .

அப்போது அந்த பணத்தை பெறுவதற்கு ஆக பணத்தை பெறும் ஆப்ஷனை பயன்படுத்தி நமக்கு ஒரு ரிக்வெஸ்ட் அனுப்பி அதில் போட சொல்வார்கள் அந்த ரிக்கோஸ்டில் 500க்கு பதிலாக 5000 அல்லது அதிகமான தொகை குறிப்பிட்டு இருப்பார்கள் .

அதே நேரம் அதை நாம் கவனிக்க முடியாதபடி நம்முடன் பேச்சு கொடுத்துக் கொண்டே நம் கவனத்தை திசை திருப்புவார்கள் .

நாமும் அவசரத்தில் அதை கிளிக் செய்து விடுவோம் அவ்வளவுதான் நம் கணக்கில் இருந்து அவர்கள் கேட்ட பணம் சென்றுவிடும் .

அதிகமான பணத்தை போட்டு விட்டோம் என்று தெரிந்து அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொண்டால் போன் எடுக்கவே மாட்டார்கள்.

 இதுதான் இப்போது காவல்துறையை எச்சரித்துள்ள புது மோசடி.

 எனவே பணம் போடும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை சரியாக பார்த்துவிட்டு பணத்தை போடவும் .

தவறுதலாக தெரிந்தால் உடனே சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையில் புகார் அளிக்கவும்.
 பணத்தை நீங்கள் இழந்திருந்தாலும் காவல்துறையில் புகார் அளித்தால் எழுந்த பணத்தை மீட்க வழி உள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை