நாங்களும் டாக்டர்தாங்க

மருத்துவ குறிப்புகள் 
1. வெள்ளைப் பூண்டை மையாக அரைத்து அந்த விழுதை பஞ்சில் தடவி அந்த பஞ்சை காதில் வைத்துக் கொண்டு இரவு படுக்கச் செல்ல வேண்டும். இம்மாதிரி மூன்று நாட்கள் செய்து வர காது இரைச்சல் குணமாகும்.

2. தும்பை பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுக தலைபாரம் நீரேற்றம் தீரும்.

3. காலில் பித்த வெடிப்பா? மாமரத்தின் பிசையினை சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து இதனை இரவு படுக்கைக்கு போகும் முன்பு பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் சில நாட்களில் குணமாகும்.

4. மிளகு, சந்தனம், ஜாதிக்காயை ஒன்றாக சேர்த்து அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மறையும்.

5. கரிசலாங்கண்ணி சாறு தினமும் காலையில் குளிக்கும் முன் தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வர வழுக்கை வராது. முடி வளரும்.
6. நான்கு வெற்றிலை, கொஞ்சம் துளசி, கருவேப்பிலை சிறிது இதனோட வறுத்த கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, ஒரு கரண்டி மிளகாய், பெருங்காயம் வறுத்து போட்டு தேவையான உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிடலாம். வயிறு செரிமானமின்மை, வெப்ப வாயு எல்லாம் சரியாகும். வயிறு லேசாகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை