ஆரோக்கியத்தை பாதிக்கும் உறங்கும் முறைகள்
உடலும், மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு தூக்கம் அடிப்படையானது.
விரைவில் போதுமான தூக்கம் இல்லை என்றால் அடுத்த நாள் உங்களின் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படும் .
சீரான தூக்கம் ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பது முதல் பல நன்மைகளை உண்டாக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தூங்கும்போது குப்புற படுத்தல், மல்லாக்க படுத்தல், ஒருகளித்து படுத்தல் என்று மூன்று முறைகளில் தூங்கு பவர்களே அதிகம்.
இது தவிர குழந்தை போல உடலை சுருக்கிக் கொள்வது, ஒருபுறம் சாய்ந்து அருகில் இருப்பவர்கள் அல்லது தலையணையை அணைத்துக் கொள்வது, கால்களுக்கு மட்டும் தலையணையை வைத்து படுப்பது, மல்லாந்து படுத்துக்கொண்டு கை கால்களை அகற்றி வைத்தவாறு தூங்குவது, நாற்காலியில் அமர்ந்தவாறு மேசையில் சாய்ந்து தூங்குவது, கட்டில் அல்லது சோபாவில் ஒரு காலை மட்டும் கீழே தொங்கவிட்டபடி தூங்குவது என பல விதங்களிலும் தூங்குகிறோம்.
எத்தகைய நிலையில் தூங்குகிறோம் என்பதும் , உடல் நலத்தில் பாதிப்புகளை உண்டாக்கும்.
தூக்கத்தின் போது உடல் உறுப்புகள் தன்னைத்தானே சீர்படுத்திக் கொள்ளும்.
தூங்கும் முறை
முதுகு தண்டு மற்றும் முக்கிய உறுப்புகளில் எவ்வித தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை பொறுத்து நன்மை தீமைகள் ஏற்படலாம்.
இரவில் தூங்கி காலையில் எழுந்தரிக்கும் போது சிலருக்கு அதிக உடல் வலி இருக்கும்.
தூங்கும் முறை சரி இல்லாததே இதற்கு காரணம் .
குப்புறப்படுத்து தூங்கும் போது வயிற்றுப் பகுதியில் அழுத்த வேறுபட்டு செரிமான கோளாறுகள் ஏற்படும்.
அதேபோல் மல்லாந்து கை கால்களை அகற்றி வைத்த நிலையில் படுத்தால் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகும்.
இது குறட்டையை உண்டாக்கும்.
உக்காந்தபடி தூங்குவது ,உடலை சுருக்கி கொண்டு தூங்குவது, கை கால்களை தொங்கவிட்ட நிலையில் தூங்குவது உடலில் சீரான ரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும்.
இதே நாள் உடலில் குறிப்பிட்ட பகுதியில் வலி உணர்வின்மை உண்டாகும் .
வலது பக்கமாக சாய்ந்து படுக்கும் போது சுவாசத்தின் அளவு குறையும்.
ஆகையால் உடல் எளிதில் குளிர்ச்சி அடைந்து விடும் .
இறப்பையில் உள்ள உணவு செரிக்காமல் வயிற்று உப்புசம் மற்றும் வாயு தொல்லை அதிகரிக்கும்.
சரியான உறங்கும் முறை
இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் இருக்கும் படி ,இடதுபுறம் ஒருக்களித்தபடி ,கால்களை நீட்டி படுக்கலாம் அல்லது தலையனையில் சரியாக தலையை வைத்து மல்லாந்து கால்களை ஒட்டியபடி நீட்டியும், கைகளை உடல் மேல் வைத்து படுக்கலாம் .
இம்முறையில் தூங்கும் போது உடல் முழுவதும் சீராக ரத்த ஓட்டம் பாயும்.
உடலுக்கு தேவையான புராண வாயு கிடைத்து உணவு எளிதில் செரிக்கும்.
கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தூங்கும் முறைகளை பின்பற்றுவது அவசியம்.