இது......அதுல ......?


இது குடம்புளி ,
தமரத்தம் புளி ,
சரக்கொன்றை புளி ,
கொடுக்காப்புளி ,
பொந்தம்புளி ,
ஆனை புளி,

தற்பொழுது புழக்கத்தில் இருக்கின்ற புளி பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து அரேபிய வணிகர்கள் வழியாக இந்தியாவுக்குள் வந்தது.

 அதற்கு முன் புளிப்பு சுவைக்காக நாம் பயன்படுத்தியது, குடம்புளியைதான்.

 மருத்துவ நூல்கள் புளி, பழம் புளி என இரண்டு வகைகளைப் பற்றி பேசுகின்றன இதில் பழம்புளி என்பதை பழைய புளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் அந்நூல்கள் பழம் புளி எனக் குறிப்பிடுவது குடம்புளியைதான். சங்க இலக்கியங்களில் பசும்புளி என்று குறிப்பிடுவதும் குடம்புளியை தான்.

 புள்ளியில் குடம்புளி, புளிச்சகாய் தமரத்தும் புளி (ஸ்டார் ஃப்ரூட்) ,புளிமா, சரக்கொன்றை புளி , புந்தம்புளி, ஆணை புளி என பல வகைகள் இருக்கின்றன.

 நாம் தற்போது பயன்படுத்தும் புளியை விட குடம்புளி தான் உடலுக்கு நல்லது.

 இது ரத்தத்தில் கொழுப்பு சேர விடாது.

 ரத்தக் குழாய்களிலும் கொழுப்பு படிய விடாது என்பதால் ஹார்ட் அட்டாக் வருவது பெரும் அளவு தடுக்கப்படும்.

 உணவில் குடம்புளியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை உடல் எடை குறையும். 

புளி அமிலத்தன்மை கொண்டது.

 குடம்புளியோ பழங்களைப் போல ஆல்கலையின் தன்மை கொண்டது.

 குடம்புளியை பயன்படுத்தினால் காய்ச்சல், வாந்தி ,கண் நோய்கள், கை கால் வலி குணமாகும்.
 பித்தம் கட்டுப்படும். மூச்சரிப்பு வராது. பிரசவத்துக்கு பிறகு வயிறு பெருக்காது.

 சித்த மருத்துவ நூல்கள் குடம்புளியை தீதில்லா புளி என்கின்றனர் .

குடம்புள்ளி காடுகளில் தான் அதிகம் காய்க்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் குடம்புளி அதிகளவில் விளைவிக்கிறது.

 ஆப்பிரிக்காவில் பொந்தம்புளி மரத்தின் தண்டுகளை குடைந்து தண்ணீர் சேமித்து வைக்க பயன்படுத்துகிறார்கள்.

 தமரத்தம் புளி (ஸ்டார் ஃப்ரூட்) மற்றும் புளிமா இரண்டும் ஒரு கை போல பயன்படுகின்றன. கோடைகால திருவிழாக்களில் கலந்து கொள்பவர்களுக்கு நீரிழிப்பு ஏற்படாமல் தடுக்க கொடுக்கப்படும்
 பாணகத்தில் புளி சேர்க்கப்படுகிறது.

 புளியும் பூவை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் நாவின் ருசியின்மை சரியாகும்.

 இலையை தண்ணீருடன் கொதிக்க வைத்து ஒத்தடம் கொடுக்க மூட்டு வலி வீக்கம் குறையும்.

குடம்புளியை உடனடியாக கரைத்து சாறு எடுக்க முடியாது வெந்நீரில் ஊறவைத்து 12 மணி நேரம் கழித்து கரைத்து தண்ணீரை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

 அதே நீரை மீண்டும் அடுத்த நாளும் பயன்படுத்தலாம் இப்படி ஒரு குடம்புளி பழத்தை மூன்று முறை பயன்படுத்தலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை