குழந்தைகள் பத்திரம்


குழந்தைகளுடன் வெளியில் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

 இப்போதைய சூழ்நிலையில் பல குழந்தைகளுக்கு வீட்டுக்கு வெளியில் சென்று ஓடி ஆடி விளையாடும் வைபவம் , அருகில் வசிக்கும் சம வயது நண்பர்களின் அறிமுகம் நட்பு ஆகியவையோ கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

 அதற்கு பதிலாக கம்ப்யூட்டரும் செல்போனும் அவர்களது நண்பர்களின் இடத்தை பிடித்து விடுகின்றன.

 நிஜ உலகுடன் தொடர்பு இல்லாமல் வலைய தள உலகில் சஞ்சரிக்கும் குழந்தைகள் அவர்களது உறவினர்களிடம் கூட சகஜமாக பழகுவதில் தயக்கம் கொள்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 இந்த நிலையில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பதற்கு அவர்களை வாரம் ஒரு முறையாவது வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று வெளி உலகத் தொடர்புடன் இருக்கச் செய்வது நல்லது.

 வெளியே செல்வதில் ஷாப்பிங், உறவினர்களின் வீட்டுக்கு செல்வது, பூங்காக்களுக்கு செல்வது, சுற்றுலா செல்வது, என பல விதங்கள் உள்ளன.

 இவ்வாறு ஐந்து முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்கு முன்பு தேவையான முன் ஏற்பாடுகள் செய்வது அவசியமானது.
ஆடைகள்
 சினிமா, தியேட்டர்கள், பார்க், ஷாப்பிங் ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்லும் போது அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் நம்மால் எளிதாக கண்டுபிடிக்கும் நிறங்களில் இருக்க வேண்டும்.

 குறிப்பாக பருத்தி ஆடைகளை அணியச் செய்வது அழைத்துச் செல்வது நல்லது.

உணவுகள்
 துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து தரமான உணவு வகைகளையே வெளியிடங்களிலும் தேர்வு செய்து சாப்பிட அனுமதிக்க வேண்டும்.

 குழந்தைகளின் விருப்பப்படி புதிய உணவு வகைகளை சாப்பிட அனுமதிப்பது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தலாம்.

உணவகங்களில் சாப்பிடுவது தவிர குழந்தைகளுக்கு தேவையான இதரத்தின் பண்டங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்வது பாதுகாப்பானது.

குறிப்பாக சுடுநீர் எடுத்துச் செல்வது பலவிதமான நன்மை தரும் 

நேரம்
 வெயில் அதிகமாக நிலவும் பகல் 12 மணி முதல் 2 மணி வரையிலான நேரத்தில் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை விட காலை அல்லது மாலை நேரங்களில் அழைத்துச் செல்வதே ஏற்றது

முன் ஏற்பாடு
 உறவினர் வீடுகளுக்கு செல்லும் பொழுது சம்பந்தப்பட்டவர்களது உறவுமுறை

 அவர்களிடம் எவ்வாறு பேச வேண்டும்

 அவர்களது வீட்டில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி முன்னதாகவே குழந்தைகளிடம் தெரிவிப்பது நல்லது

 வெளியே செல்லும்போது சந்திக்கும் மனிதர்களை மரியாதையுடன் அணுகுவதற்கு குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.

இயற்கை உபாதைகள்
 வெளியில் செல்லும்போது இயற்கையை உபாதைகளை கழிக்க வேண்டிய உணர்வு ஏற்பட்டால் அதை உடனடியாக தெரிவிப்பதற்கு குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்

 கழிப்பறைக்கு சென்று வந்த பின்னர் கை கால்களை சோப்பு போட்டு நன்றாக கழுவும் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்

 டயபர் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அவ்வப்போது அதை மாற்றி விட வேண்டும்

 வீட்டிலிருந்து கிளம்பும் முன்னர் குழந்தைகளுக்கான பையில் டையாப்பர் ,தண்ணீர் பாட்டில், டிஷ்யூ பேப்பர், ஆகியவை இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை