சிக்கலான மலச்சிக்கல்...


சிறியவர் முதல் பெரியவர் வரை உடலில் இருக்கும் பெரும் சிக்கல் மலச்சிக்கல் பிரச்சனைதான்.

 இதற்காக பானங்கள், தேநீர், மருந்து என பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டாலும் அது நிரந்தர தீர்வை அளிப்பதில்லை.

 உணவு உடல் அமைப்பு வாழ்வியல் மாற்றம் என்ன பல காரணங்கள் ஏற்படும்.

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் சில பாட்டி வைத்திய குறிப்புகள்.

=>தூதுவளை காயை உலர்த்தி தயிர் உப்பு சேர்த்து பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் .

=>பால் பெருக்கி இலையை வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்

=>கருங்காக்கரட்டான்பேரை பால் ஆவியில் வேகவைத்து உலர்த்தவும்.

 அதில் பாதி அளவு சுக்கு சேர்த்து அரைக்கவும்.


 காலை மாலை இரண்டு வேலையும் அரை டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வரலாம்.

 இதன் மூலம் மலச்சிக்கல் சரியாகும்.

=> நில ஆவாரை இலையை துவையலாக அரைத்து,இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை படிப்படியாக குறையும்.

=> கருவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்த பெருங்காயம், ஆகியவற்றை சம அளவு இடித்து சூரணம் செய்து சூடான சாதத்துடன் கலந்து நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.

=> சிறிதளவு நுணா வேரை குடிநீரில் ஊற வைத்து குடிக்கலாம்.

=> ஒரு பிடி மூக்கிரட்டை வேர் மற்றும் நான்கு மிளகை 100 மில்லி விளக்கெண்ணையில் வாசனை வரும்  காய்ச்சவும். 

ஆறியதும் வடிகட்டி வைத்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.

=> அகத்திக் கீரையை வாரம் ஒரு முறைசேர்த்துக் கொள்ளலாம்.
=> ஒரு கிலோ விளக்கெண்ணையை ஒரு கிலோ நன்றாக கழுவிய சோற்றுக்கற்றாழை சதைப்பகுதி, அரை கிலோ பனங்கற்கண்டு, அரை கிலோ வெள்ளை வெங்காயச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து காய்ச்சவும்.

இந்த எண்ணையை காலை மாலை இரண்டு வேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி உடல் தேறும்.

 மேலும் இம்முறையை பின்பற்றும் போது புளி நீக்கிய பத்திய உணவு சாப்பிட வேண்டும்.

=> வாதநாராயணன் இலைச்சாறு, விளக்கெண்ணெய், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி, வெண்கடுகு ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் வாதமடிக்கித் தைலத்தை தினமும் காலை வேளையில் ஒரு தேக்கரண்டி சாப்பிடலாம்.

=>30 மில்லி விளக்கெண்ணையில் மூன்று துளி எருக்கு இலைச் சாறை கலந்து குடிக்கலாம்.

=> ரோஜாப்பூ இதழுடன் சீன கற்கண்டு, கலந்து பிசைந்து அவற்றுடன் சிறிது தேன் கலந்து தொடர்ந்து ஆறு நாட்கள் வெயிலில் வைத்தால் அது குல்கந்தாக மாறும்.

 இதை காலை மாலை என இரு வேலையும் சுண்டக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

= > வில்வ இலை சூரணம் அரை தேக்கரண்டி, வெண்ணெய் அல்லது நெய்யில் கலந்து தினமும் காலை மாலை வேளையில் சாப்பிடலாம்.

=> முடக்கத்தான் இலையை அவிழ்த்து சாறு எடுத்து ரசமாக்கி உணவோடு சேர்த்து வாரம் ஒரு முறை என்ற கணக்கில் சாப்பிடலாம்.

  மிளகாய் பூண்டு இலையை கீரை போல் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிடலாம் இதனால் மலச்சிக்கல் மட்டுப்படுத்தப்படும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை