மழைக்கு இத்தனை பெயரா...?


ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி உடலையும் உடையோ நினைக்காது

தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பேசும் மழை புல் பூண்டின் இலைகளும் நம் உடைகளும் சற்றே ஈரம் ஆகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்.

சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்து வரப்படும் மழைச்சாரல் எனப்படும். மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும் , காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர். சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள். சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும் மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்

அடை மழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே, அப்படி இடைவெளி இன்றி பார்வையை மறைக்கும்படி பெய்யும் மழை. அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும், குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்
கனமழை - துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்

ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து, மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை.

பனிமழை- பனி துளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்

ஆழி மழை - ஆழி என்றால் கடல். இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை. ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை.....

கருத்துரையிடுக

புதியது பழையவை