தடவி பாரு.....ஜாேராே ஜோரு ....

தடவிப் பாரு
முகம் ஜாேராே ஜாேரு


 சருமம் பற்றிய மற்றும் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படும்,
தேமல், அரிப்பு , முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இரண்டு அல்லது மூன்று முறை தினமும் நீரில் முகம் கழுவுவது நல்லது.

சருமம்  ஆரோக்கியமாக இருப்பதற்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஐந்து பேசியல்கள்.

முகம் பொலிவு பெறுவதற்கு

சந்தனத்தூள்  - 1 கரண்டி

ரோஜா பன்னீர் - 2 கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 கரண்டி

எடுத்துக்கொண்டு நன்றாக கலக்கவும்.

 முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கடந்த பின்பு குளிர்ந்த தண்ணீரில் கழுவும்.


ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு

ஓட்ஸ் - 2 கரண்டி

ஒரு முட்டையின் வெள்ளை கரு

தேன் - 1 கரண்டி

நன்றாக கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பின்பு முகம் மட்டும் கழுத்துப் பகுதிகளில் தடவி 30 நிமிடங்கள் கடந்த பின்பு குளிர்ந்த நீரில் கழுகவும்.

சிவப்பழகு பெறுவதற்கு

வெட்டிவேர் அரைத்தது - 1 கரண்டி

சிவப்பு சந்தனத்தூள் - 1 கரண்டி

கஸ்தூரி மஞ்சள் - 1/2 கரண்டி

குங்குமப்பூ - 1/4 டீஸ்பூன்

தேவையான அளவு பால் சேர்த்து பசை போல் கலந்து கொள்ளவும்.

பத்து நிமிடங்கள் ஊறவைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மென்மையாக தடவி மசாஜ் செய்யவும்.

30 நிமிடங்கள் கழித்த பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவோம்.
மிருதுவான சருமத்திற்கு

ஸ்ட்ராபெரி பழம் அரைத்தது - 2

முல்தானி மட்டி - 2 கரண்டி

ரோஜா பன்னீர் - 3 கரண்டி

மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவவும்.

15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

அரிப்பு, தேமல்,  நீங்கி முகம் பளபளப்பு பெறுவதற்கு

தேன் -  1 கரண்டி

சர்க்கரை - 1 கரண்டி

கற்றாழை ஜெல் - 1 கரண்டி

மூன்றையும் கலந்து முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களில் நீங்கும் வரை மென்மையாக தழுவி மசாஜ் செய்யவும்.

வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவும்.

கடலை மாவு - 1 கரண்டி

கஸ்தூரி மஞ்சள் தூள் - 1 கரண்டி

பால் - 3 கரண்டி

தேன் - 1 கரண்டி

சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் முழுவதும் தடவவாேம்.


30 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரில் கழுவவோம்.

பாதாம் எண்ணைக் கொண்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்யவும்.



கருத்துரையிடுக

புதியது பழையவை