பறவைகளையும் அழைக்கலாமா?


உங்கள் தோட்டத்தை பறவைகளின் சரணாலயமாக மாற்றலாமா?

பறவைகளின் மீது காதல் கொண்டவர்கள் உணவு, இருப்பிடம், நீர் ஆகியவற்றை தங்கள் வீட்டுத் தோட்டங்களிலும், பால்கனியிலும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பறவைகளை தங்கள் வசிப்பிடம் நோக்கி ஈர்க்க முடியும்.

வீட்டுத் தோட்டத்தில் கூடு போன்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் பறவைகளுக்குப் பிடித்தமான இடமாக நமது தோட்டத்தை மாற்றலாம்.

சிட்டுக்குருவிகளுக்கு விருப்பமான மற்றும் அவை உண்பதற்கு ஏதுவான திணை, கம்பு ,கேழ்வரகு, குதிரைவாலி போன்ற தானியங்களை வீட்டின் மேல்தளம் அல்லது தோட்டத்தில் வைப்பதால் அவற்றை எளிதாக இருக்க முடியும்.

சிறிய தொட்டியில் தூய்மையான தண்ணீர் வைத்தால், பறவைகள் தொடர்ந்து நீர் தேவைக்காக தங்களின் வீட்டை அல்லது  தாேட்டத்தை தேடி வரும் .அவ்வாறு வைக்கப்படும் நீரில் சர்க்கரை கலந்து வைப்பது பறவைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
தண்ணீர் மற்றும் உணவு வைக்கும் பாத்திரங்கள் மண் பாண்டங்களாக இருப்பது சிறந்தது.

பிளாஸ்டிக் பாத்திரங்களின் நிறம் பறவைகளை அச்சமூட்டக்கூடும்

பழச்செடிகள் மற்றும் காய்கறி செடிகள், பூச்செடிகள் ஆகியவை தோட்டத்தில் இருந்தால் பறவைகள் அதிகமாக கவரப்படும்.

சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவைகளுக்கு அரிசி மற்றும் நாம் உண்ணும் உணவுகளை வைக்காமல் அவற்றிற்கு உண்ண ஏதுவான சிறு தானியங்களை வைக்க வேண்டும்.

செம்பருத்தி, ஊமத்தம்பூ போன்ற குழாய் வடிவ மற்றும் கொத்து வடிவமைப்பு உடைய பூக்கள் பெரிய வகை பறவைகளையும் அதிகமாக இருக்கும்.

பறவைகளின் தேவையறிந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொழுது உங்கள் தோட்டத்தை பறவைகளின் சரணாலயமாக மாற்ற முடியும்.

1 கருத்துகள்

புதியது பழையவை