போரும் உணவும்

போரும் உணவும் 
போர் ஒரு துயரம் என்றால் காபிதான் ஒரே ஆறுதல் என்று வினோதமான பழமொழி ஒன்று அமெரிக்காவில் உள்ளது.

 அமெரிக்கர்கள் இரண்டு உலகப் போர்களையும் ஒரு உள்நாட்டு யுத்தத்தையும் எதிர்கொண்டவர்கள்.

 அவர்களுக்கு போரின் சகல வழிகளும் தெரியும் .

ஒரு நாட்டில் போர் ஏற்படும்போது அங்கு முதலில் பாதிக்கப்படுவது உணவுப்பொருள் பகிர்மானம் தான்.

 பண்டைய கால முதலே ஒரு நாட்டின் மீது படையெடுக்கும் அண்டை நாட்டு அரசு கோட்டையை முற்றுகை இடும்போது முதலில் தடை செய்வது கோட்டைக்குள் செல்லும் உணவுப் பொருட்களை தான்.

 உணவு வளங்களை தடை செய்தால் யாராக இருந்தாலும் தன்னால் சரண் அடைந்தே ஆக வேண்டும்.

 அமெரிக்காவின் சிவில் யுத்தம் நடைபெற்ற நாட்களில் அங்கு உணவு தட்டுப்பாடு நிலவியது.

 பஞ்சத்தால் ஏழை மக்கள் வாடி தவித்தனர்.

 ஒரு கட்டத்தில் ராணுவ வீரர்களுக்கான உணவு வழங்குதலிலும் குறை ஏற்பட்டது.

 குறிப்பாக காபி வழங்குவதில் சிக்கல் உருவானது .

எனவே அதனை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தார்கள்.

 இது அமெரிக்க வீரர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 அந்நாட்களில் ராணுவ வீரர்கள் எழுதிய பல டைரிகள் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

 அதில் அந்நாட்களில் கிட்டத்தட்ட பெரும்பாலானோர் எழுதியிருக்கும் சொல் காபி தான்.

 போர், குண்டு, பீரங்கி, அதிகாரிகள், ராணுவ வீரன், லிங்கன் என்ற எந்தச் சொல்லையும் விட காபி என்று சொல்தான் அந்நாட்களில் அதிகமான ராணுவ வீரர்களால் எழுதப்பட்டது என்று சொன்னால் அவர்களின் காபி பைத்தியம் எந்த அளவுக்கு முற்றியிருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.

 எப்போதும் மேலே சொன்ன பழமொழியை படியுங்கள்.
 அது உருவான காரணம் புரியும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை