மிகவும் இரகசியமானது
இந்த காதல்
சொல்லாமல் இதயத்தில் குடியேறும்
உணர்வுகளை புரட்டி போடும்
ஏன் வந்தது என்றே தெரியாது
வெளிய சொல்லிட தயங்கி நிற்கும்
நம்மை அழகாக்கி வைத்திடும்
நாம் பார்ப்பதை எல்லாம் இரசனையாக்கும்
மளிகை பொருட்கள் கூட
எழுதிட தெரியாதவனையும்
வர்ணனை கவிதைகளை
எழுதிட வைக்கும்
சொல்லிட துடிக்கும்
சொல்லாமலும் வைக்கும்
சொல்லியப் பின்னே
செல்லாமல் போனாலும்
இதயத்தை விட்டு அகலாது
ஓர் ஓரத்தில் வாழ்ந்திடும்
காதல்.....