கண்களில் ஏற்படும் அழுத்தம் கவனத்திற்குரியது
மன அழுத்தம், ரத்த அழுத்தம் கேள்விப்பட்டிருப்போம் .ஆனால் கண்களிலும் அழுத்தும் ஏற்படும் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டோம். கண்களில் அக்வஸ் ஹூமர் என்ற திரவம் இருக்கும் இது கண்களில் உள்ள லென்ஸ்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதுடன் கண்களில் உண்டாகும் அழுத்தத்தை சிறிதாக பராமரிக்கவும் உதவும்.
இந்த திரவமானது கண்களில் இருந்து தானாக வெளியேறும்.
பின்பு மீண்டும் புதிதாக உற்பத்தியாகும்.
சில நேரங்களில் அக்வஸ் ஹூமர் திரவம் கண்களில் நீராக தேங்கி நிற்கும்.
அவ்வாறு தேங்கும் போது பார்வை நிரம்பி பாதித்து கண்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் .
சிறிது சிறிதாக இந்த அழுத்தம் அதிகரித்து பார்வை இழப்பை கூட உண்டாக்கலாம் .
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நோய்களின் பட்டியலில் இதுவும் ஒன்று.
காரணங்கள்
பரம்பரை, கிட்ட பார்வை, தூரப்பார்வை, வயது முதிர்ச்சி, ரத்த ஓட்டத்தை பாதிக்கக்கூடிய வலிகளான ஒற்றை தலைவலி, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் இருப்பது. கண்ணில் அடிபடுதல் மற்றும் ஸ்டிராய்டு மருந்துகள் அடிக்கடி சாப்பிடுவது போன்ற காரணங்களால் கண்களில் அழுத்தம் அதிகரிக்கும்.
அறிகுறிகள்
பார்வையில் மாற்றம் ஏற்படுதல்.
அடிக்கடி கண்ணாடி மற்றும் நிலை.
பக்கவாட்டு பார்வையில் கோளாறு.
வண்ண ஒளி வட்டம் தெரிதல்.
சிகிச்சை
40 வயதை கடந்தவர்கள் வருடம் ஒருமுறை கண் பார்வை பரிசோதனை செய்வதன் மூலம் கண்களில் ஏற்படும் அழுத்த பிரச்சனையை கண்டறிய முடியும்.
பத்து முதல் 21 எம் எம் ஹெச் ஜி வரை கண்களில் சராசரியாக அழுத்தம் இருக்கலாம்.
அதற்கு மேல் செல்லும்போது கட்டாயம் கண் அழுத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் .
கண்களில் தேங்கும் திரவத்தின் உற்பத்தியை குறைப்பது அல்லது வெளியேற்றுவதன் மூலம் கண் அழுத்தத்தை குறைக்க முடியும்.
இதற்கென சிறப்பு கிளாக்கோமா கண் சொட்டு மருந்து சிகிச்சை மேற்கொள்ளப்படும் .
கண் மருத்துவரின் அறிவுரை இப்படி தினமும் இந்த சொட்டு மருந்து சிகிச்சை மேற்கொள்ளலாம் .
வராமல் தடுக்க
வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் கே, துத்தநாகம், செம்பு, செலினியம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவுகளை சாப்பிட வேண்டும்.