கேரட் சர்ம பொலிவைத்தரும்
கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடும் போது நமக்கு அதிக அளவில் சத்துக்கள் கிடைக்கின்றன.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்துக்கும் ,உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது .
கேரட்டில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டின் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது .
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் .
கேரட் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
மேலும் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.
வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
கேரட் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.
பாதி வேக வைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் ஆகியவை கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
பெண்கள் அடிக்கடி கேரட் சாப்பிட்டு வந்தால் மார்பகப் புற்றுநோய் வராமல் காத்துக் கொள்ளலாம் .
கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் .
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ,பி லிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடுகிறது.
கேரட் சருமத்திற்கு பொலிவை தந்து தோல் சுருக்கத்தை நீக்குகிறது .
உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி இரவு நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைத்து முகம் பொலிவு பெறும்.
ஒரு டம்ளர் கேரட் சாருடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்து வர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
கேரட் துருவலுடன் உப்பு அரை ஸ்பூன், தனியா பொடி ,கொத்தமல்லி தழை, புளிப்பில்லாத தயிர் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வயிற்று வலி குணமாகும்.
நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படும்.
மேலும் எலும்புகள், பற்கள், தோல் ஆகியவற்றுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.