தட்டை செய்யலாம்... தட்டு நிறையா ...


கோதுமை மாவு 1 கப்
பாசி பருப்பு - 2 கரண்டி
சோளமாவு - 4 கரண்டி
சீரகம் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - முக்கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெண்ணெய் - 50 கிராம்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
கறிவேப்பில் - நறுகியது சிறியளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - வேண்டிய அளவு
எண்ணெய் - போதுமான அளவு

பாசி பருப்பை அரை மணி நேரம் தண்ணீர் சேர்த்து ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

 பச்சை மிளகாய் இஞ்சி துண்டை மிக்சியில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு , அரைத்த பாசிப்பருப்பு , மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வெண்ணெய் சிறிது சிறிதாக சேர்த்து மாவை பிசையவும்.

 அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, எள் ,கறிவேப்பிலை , சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும் .
இப்பொழுது அதில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைய வேண்டும்.

 ஐந்து நிமிடங்கள் கழித்து சப்பாத்தி மாவை போல் உங்களுக்கு பிடித்தமான வடிவில் வெட்டி துண்டு போட்டுக் கொள்ளவும் .

சூடான எண்ணெயில் இவற்றை பொன்னிறமாகும் வரை பொரித்தால் மொறு மொறுப்பான தட்டு நிறையா தட்டை ரெடி.......

கருத்துரையிடுக

புதியது பழையவை