பெண்கள் சிந்தித்தாலே பாதிப்புதான்....



பெண்கள் ஒரே நேரத்தில் பலவற்றைப் பற்றி சிந்திக்கும் குணம் கொண்டவர்கள்.

இதன் காரணமாகவே பெண்கள் பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

கவலை என்பது மன அழுத்தத்தின் முதல் படி.

அதை கட்டுப்படுத்துவது அனைவருக்கும் கடினமான விஷயமாக உள்ளது.

அடிக்கடி கவலைப்படும் பிரச்சினை ஐந்தில் ஒருவருக்கு உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன..

இதில் பெண்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன.

கவலை மற்றும் மனசோர்வு ஆண்களை விட பெண்களுக்கு இரண்டு மடங்காக அதிகமான பாதிப்பை தருகிறது.

மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்ப காலங்களில் பெண்களின் ஹார்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பு ,உடல் பருமன் போன்றவை பெண்களிடையே கவலையும் மனச்சோர்வையும் அதிகரிக்கின்றன.

அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் ,தாக்குதல் அல்லது பாலியல் வன்கொடுமையை அனுபவிப்பது போன்ற செயல்களால் மன அழுத்தம் பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது.

கவலையை தொடர்ந்து மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை கடுமையான உடல் மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

உங்களுக்கு மனச்சோர்வு மற்றும் தேவையில்லாத கவலை இருந்தால் அதை ஆரம்பத்திலேயே சரி செய்வதற்கான வழிகளை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

மனநல பிரச்சனைக்கு ஆலோசனை கேட்கும் போது மனச்சோர்வுக்கான அறிகுறிகள் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளை தெளிவாக கூறுவது மிகவும் அவசியம்.

மருத்துவரின் ஆலோசனை உடன் யோகா மற்றும் தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது.

கருத்துரையிடுக

புதியது பழையவை